ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் ச.வளர்மதி, இ.ஆ.ப., அவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று சர்வதேச சிறுதானிய ஆண்டிணையொட்டி நடைபெற்ற சிறுதானிய உணவு குறித்து விழிப்புணர்வு கண்காட்சியில் சிறந்த முறையில் சிறுதானிய உணவுகளை தயார் செய்து காட்சிபடுத்திய ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம், திமிரி வட்டாரத்திற்கு முதல் பரிசு ரூ.5,000/- மற்றும் பராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்கள்.
உடன் மாவட்ட வருவாய் அலுவலர் ந.சுரேஷ், மாவட்ட வழங்கல் அலுவலர் சத்தியபிரசாத், நேர்முக உதவியாளர் (பொது) விஜயராகவன், திட்ட இயக்குநர் மகளிர் திட்டம் ரவிச்சந்திரன், கூட்டுறவு சங்கங்கள் இணைப்பதிவாளர் சிவகுமார், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் வசந்தி ஆனந்தன், இணை இயக்குநர் வேளாண்மை சண்முகம், துணை இயக்குநர் வேளாண்மை செல்வராஜ், நேர்முக உதவியாளர் வேளாண்மை தபேந்திரன், துணை இயக்குநர் வேளாண் வணிகம் சீனிராஜ், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் முரளி மற்றும் பலர் உள்ளனர்.
- சிறப்பு செய்தியாளர் ஆர் ஜே.சுரேஷ்குமார்.
No comments:
Post a Comment