ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த அகவலம் கிராமத்தில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம் சார்பில் ஆறாம் ஆண்டு திருவிளக்கு வேள்வி பூஜை அகவலம் ஸ்ரீ தேவி பூ தேவி ஸ்ரீ ஸ்ரீனிவாச பெருமாள் கோவில் வளாகத்தில் நடைபெற்றது. முதலில் அம்மனுக்கு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. குரு சக்தி சாந்தா & பிரதர்ஸ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இதில் நெமிலி ஒன்றிய கவுன்சிலர். கிருஷ்ணவேணி வெங்கடேசன், அகவலம் ஊராட்சி மன்ற தலைவர். ஆஷா மார்கண்டேயன், அகவலம் நாட்டாண்மை . மீரா வினாயகம், திலகா, சதீஷ், கவியரசு, கோகிலா, வரலட்சுமி, பிரேமா ஆகியோர் தலைமையில் பஜனை மற்றும் ஜோதி வழிபாடு நடைபெற்றது இறுதியில் விழாக் குழுவினர்கள் சார்பில் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் கிராம பொதுமக்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.
- செய்தியாளர் பிரகாசம் நெமிலி தாலுகா
No comments:
Post a Comment