செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பில் அரசின் சாதனைகள், நலத்திட்டங்கள் குறித்த புகைப்படக் கண்காட்சியினை அமைச்சர் ஆர் காந்தி பார்வையிட்டார் உடன் மாவட்ட ஆட்சியர்.
கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி அவர்கள் ராணிப்பேட்டை மாவட்டம் மேல்விஷாரம் நகராட்சி, அப்துல் ஹக்கீம் பொறியியல் கல்லூரியில் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் சார்பில் நடைபெற்ற சிறப்பு பட்டா வழங்கும் முகாமில் செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பில் அரசின் சாதனைகள் மற்றும் நலத்திட்டங்கள் குறித்து வைக்கப்பட்டிருந்த புகைப்படக் கண்காட்சியினை பார்வையிட்டார்கள். உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் ச.வளர்மதி, இ.ஆ.ப., ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் ஜெ.எல்.ஈஸ்வரப்பன், மாவட்ட வருவாய் அலுவலர் ந.சுரேஷ் மற்றும் பலர் உள்ளனர்.
- சிறப்பு செய்தியாளர் ஆர்ஜே.சுரேஷ்குமார் செய்திகள் மற்றும் விளம்பர தொடர்புக்கு 9150223444.
No comments:
Post a Comment