ஆற்காடில் நமது லட்சியம் வளர்ச்சி அடைந்த பாரதம் வாகனம் மூலம் விழிப்புணர்வு. - தமிழக குரல் - இராணிப்பேட்டை.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday 4 January 2024

ஆற்காடில் நமது லட்சியம் வளர்ச்சி அடைந்த பாரதம் வாகனம் மூலம் விழிப்புணர்வு.


ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு வட்டத்திற்குட்பட்ட வளவனூர் கிராமத்தில் இன்று நமது லட்சியம் வளர்ச்சி அடைந்த பாரதம் குறித்து விழிப்புணர்வு வாகனம் மூலம் பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்த நிகிழ்ச்சியானது ஊராட்சி மன்றத் தலைவர் சேகர் தலைமையில் நடைபெற்றது. 

இதில் துணை தலைவர், பரிமளா சுபானந்தம், ஊராட்சி செயலர் கிருபானந்தம், மாவட்ட செயலாளர் வரதன், பாஜக ஒன்றிய தலைவர் கோவிந்தராஜன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக விழிப்புணர்வு வாகனத்தில் மூலம் மத்திய அரசின் திட்டங்கள் சாதனைகள் குறித்து ஒளிபரப்பு செய்யப்பட்டது.

 

மேலும் தபால் துறை, மருத்துவத் துறை, வங்கி துறை, சுகாதாரத் துறை, உணவு பாதுகாப்புத் துறை, வேளாண்மைத் துறை, இந்தியன் கேஸ் உள்ளிட்ட துறையின் கீழ் வருகை தந்த அதிகாரிகள் மூலம் மத்திய அரசினுடைய திட்டங்கள் குறித்து தெளிவாக எடுத்து கூறப்பட்டது. இந்த தகவல்களை கேட்டறிந்த பொதுமக்கள் திட்டத்தில் பயனடையாத பொதுமக்கள் பயனடையும் வகையில் தெரிந்து கொண்டதாக பொது மக்கள் தெரிவித்தனர்.


இறுதியாக அனைவரும் இந்திய வல்லரசாக மாற்றுவதற்காக உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.


- சிறப்பு செய்தியாளர் ஆர் ஜே.சுரேஷ்குமார் செய்திகள் மற்றும் விளம்பர தொடர்புக்கு 9150223444.

No comments:

Post a Comment

Post Top Ad