மைக்ரோ அலைகளின் சாதனங்கள் மற்றும் சாட்டிலைட் ஆண்டெனா வடிவமைத்தல் தொடர்பான பயிற்சி! - தமிழக குரல் - இராணிப்பேட்டை.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday, 10 October 2023

மைக்ரோ அலைகளின் சாதனங்கள் மற்றும் சாட்டிலைட் ஆண்டெனா வடிவமைத்தல் தொடர்பான பயிற்சி!


செம்பரம்பாக்கம் ராஜலட்சுமி இன்ஸ்டியூட் ஆப் டெக்னாலஜி, எலக்ட்ரோனிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் துறையின் சார்பாக மைக்ரோ அலைகளின் சாதனங்கள் மற்றும் சாட்டிலைட் ஆண்டெனா வடிவமைத்தல் தொடர்பான 2 வார கால பயிற்சி பட்டறை நடைபெற்று வருகின்றது. எஸ். இ. ஆர்.பி நிதியுதவியுடன் நடைபெற்ற நிகழ்ச்சியில் முன்னனி அறிவியல் அறிஞர், மைக்ரோ அலைகளின் தந்தை டாக்டர்.எஸ். ராகவன் (என்.ஐ.டி திருச்சிராப்பள்ளி)  அவர்கள் தலைமையில் குத்து விளக்கு ஏற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். 

மேலும் டாக்டர் எஸ்.ராகவன் பேசுகையில் செல்போன் பயன்பாடுகள் மற்றும் கதிர்வீச்சு அபாயம் குறித்து விளக்கினார். இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக டாக்டர். பி. என். பாசு ஐஐடி (பி.எச்.யூ), விஞ்ஞானி வி. மகாதேவன், இயக்குனர், ஐ. எஸ். ஆர். ஓ, பெங்களூரு,   விஞ்ஞானி டி. சி. பாண்டே இயக்குனர், டி. ஆர். டி. ஓ பெங்களூரு, பயோமெடிக்கல் ஆன்டெனாவின்  இரும்பு மனிதர் டாக்டர். டி. சண்முகானந்தம், புதுவை பல்கலை  கழகம் மற்றும்  மைக்ரோ எலெக்ட்ரோ மெக்கானிக்கல் அமைப்புகளின் இரும்பு மனிதர் டாக்டர். சிந்தனைசெல்வி புதுவை தொழில்நுட்ப பல்கலை கழகம் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர். 


மேலும் துறை தலைவர் டாக்டர். அசோக் குமார், சீனிவாசன் அனைவரையும்  வரவேற்றார். முதல்வர் டாக்டர். பி. கே. நாகராஜன், டீன். ஜாய் வின்னி வைஸ், பேராசிரியர்கள் மற்றும் இப்பயிற்சி பட்டறையில் சுமார் 200க்கும் மேற்பட்ட இளம் ஆராய்ச்சியாளர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.


- செய்தியாளர் பிரகாசம் நெமிலி தாலுகா 

No comments:

Post a Comment

Post Top Ad