ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி மத்திய ஒன்றிய திமுகவின் புதிய அலுவலக திறப்பு விழா வெகு விமர்சையாக நடைபெற்றது .இதில் சிறப்பு அழைப்பாளராக நெமிலி மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் .ஆர்.பி.ரவீந்திரன் அவர்கள் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி திமுகவின் புதிய அலுவலகத்தை திறந்து வைத்தார்.


இதில் நெமிலி மதிய ஒன்றிய திமுக செயலாளர். எஸ். ஜி. சி .பெருமாள் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினரும் மாவட்ட மகளிர் அணி துணை அமைப்பாளருமான சுந்தராம்பாள் பெருமாள் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர். வி. எஸ் .முரளி நெமிலி மதிய ஒன்றிய துணைச் செயலாளர்கள். சீனிவாசன், வெங்கடேசன் பொருளாளர் .செல்வம் சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர். முரளி முகேஷ், ராஜராஜன் மற்றும் நகர கிளை கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
- செய்தியாளர் பிரகாசம் நெமிலி தாலுகா.

No comments:
Post a Comment