இது குறித்து, நெல்வாய் கண்டிகை கிராம பொதுமக்கள், நெமிலி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், நெமிலி ஒன்றிய பெருந்தலைவர் பெ.வடிவேலு அவர்களையும், துணைப் பெருந்தலைவர் ச.தீனதயாளன் அவர்களையும் சந்தித்து, தங்கள் கிராமத்தில் பகுதிநேர நியாய விலைக் கடை அமைத்து தர வேண்டுமென கோரிக்கை வைத்தனர். அவர்களின் கோரிக்கையை ஏற்று அவர்களிடம் உங்களின் கோரிக்கை விரைவில் நிறைவேற்றப்படும். இது குறித்து மாண்புமிகு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி அவர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர் ச. வளர்மதி ஆகியோரிடம் உங்கள் பிரச்சினைகளை எடுத்துக் கூறி விரைவில் பகுதி நேர நியாய விலைக் கடை அமைப்பதற்கான அனுமதி ஆணையை பெற்றுத் தருவதாக அவர்களிடம் உறுதியளித்தார்.
அதை தொடர்ந்து மேற்படி கோரிக்கை குறித்து மாண்புமிகு அமைச்சர் அவர்களிடம் சொன்னதும், உடனே மாவட்ட ஆட்சியரை தொடர்பு கொண்டு, நெல்வாய் கண்டிகை கிராமத்தில் உடனடியாக பகுதிநேர நியாய விலைக்கடை அமைக்க ஏற்பாடு செய்யுமாறு உத்தரவிட்டார். அதனையடுத்து மாவட்ட ஆட்சியர் ச. வளர்மதி அவர்கள் நேற்று அதற்கான உத்தரவு வழங்கினார். அந்த உத்தரவு கடிதத்தினை, மாண்புமிகு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி அவர்களிடம், நெமிலி ஒன்றிய பெருந்தலைவர். பெ. வடிவேலு அவர்கள் பெற்றுக்கொண்டு, நெல்வாய் கண்டிகை கிராம மக்களின் சார்பாக மாண்புமிகு அமைச்சர் அவர்களுக்கு நன்றியினை தெரிவித்துக் கொண்டார். அதை தொடர்ந்து நெல்வாய் கண்டிகை கிராமத்தில் பகுதிநேர நியாய விலைக் கடையை மாண்புமிகு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர். ஆர்.காந்தி அவர்கள் திறந்து வைக்க உள்ளார்.
- செய்தியாளர் பிரகாசம் நெமிலி தாலுகா.

No comments:
Post a Comment