வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளது குறித்து வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதை தொடர்ந்து ராணிப்பேட்டை மாவட்டத்தில் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஷில்பாபிரபாகர். இ.ஆ.ப அவர்கள் இன்று (02.12.2023) பனப்பாக்கம் பேரூராட்சிக்குட்பட்ட தாழ்வான பகுதிகளில் முன்னேற்பாடு பணிகள் மேற்கொண்டுள்ளதை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.
உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் ச.வளர்மதி, இ.ஆ.ப., மாவட்ட வருவாய் அலுவலர் ந.சுரேஷ், திட்ட இயக்குனர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை க.லோகநாயகி, செயல் அலுவலர் குமார் ஆகியோர் உடனிருந்தனர்.
- சிறப்பு செய்தியாளர் ஆர் ஜே.சுரேஷ்குமார்...

No comments:
Post a Comment