இதில் திமுக கூட்டுறவு தலைவர் ரவி, திமுக கிளை செயலாளர்கள் வேலு, முரளி, ஆறுமுகம், கோபி, வெங்கடேசன், பன்னீர்செல்வம், மஞ்சுநாதன், ஜெயவேலு, மனோகரன், ராஜேந்திரன், அசோக் உள்ளிட்ட கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது, ஏற்கனவே முள்ளுவாடி கிராமத்தில் அரசு மதுபான கடை இயங்கி வந்த நிலையில் தற்போது கடை இல்லாததால் இந்தப் பகுதியில் நாள் முழுவதும் கள்ள சந்தையில் மதுபானம் அதிக விலைக்கு விற்கப்படுகிறது.
மேலும் முள்ளுவாடி கிராமத்திலிருந்து அரசு மதுபான கடைக்கு செல்ல வெகு தூரம் பயணிக்க வேண்டியுள்ளது. கூலி தொழில் செய்பவர்கள், விவசாயத் தொழிலாளர்கள் பெரிதும் பாதிப்பு அடைகின்றனர். ஆகையால் அரசு மதுபானக் கடை திறந்தால் கள்ள சந்தையில் மது விற்கப்படுவது தடுக்கப்படும் மேலும் அரசு நிர்ணயித்த விலையில் மதுபானம் கிடைக்கும் என பொதுமக்கள் தெரிவித்தனர்.
- சிறப்பு செய்தியாளர் ஆர் ஜே.சுரேஷ்குமார்.

No comments:
Post a Comment