நெமிலி அருகே கீழ்விதி கிராமத்தில் கேப்டன் அவர்களின் 14 ஆம் நாள் நினைவு அஞ்சலி! - தமிழக குரல் - இராணிப்பேட்டை.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday 11 January 2024

நெமிலி அருகே கீழ்விதி கிராமத்தில் கேப்டன் அவர்களின் 14 ஆம் நாள் நினைவு அஞ்சலி!

 

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த கீழ்வீதி கிராமத்தில் நரசிம்மா விஜயகாந்த் ரசிகர் மன்றம் மற்றும் நெமிலி மேற்கு ஒன்றிய தேமுதிக சார்பில் மறைந்த தேமுதிக தலைவர். கேப்டன் விஜயகாந்த் அவர்களின் 14 ஆம் நாள் நினைவு அஞ்சலி ஊராட்சி மன்ற தலைவர். ஆனந்தி செல்வம், நெமிலி மேற்கு ஒன்றிய முன்னாள் தலைவர். மதியழகன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக ராணிப்பேட்டை மாவட்ட தேமுதிக செயலாளரும், முன்னாள் சோளிங்கர் சட்டமன்ற உறுப்பினருமான பி. ஆர். மனோகரன் கலந்து கொண்டு கேப்டன் அவர்களின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். 


இதில் மாவட்ட பொருளாளர். அசோகன், த. செ. கு. உ ஏகாம்பரம், கோபி, சரவணன், ஊராட்சி மன்ற துணை தலைவர். அர்ச்சனா கலையரசன், நெமிலி மேற்கு ஒன்றிய செயலாளர். ஸ்ரீதர், நெமிலி மத்திய ஒன்றிய செயலாளர். வினோத், நெமிலி கிழக்கு ஒன்றிய செயலாளர். மூர்த்தி, நெமிலி முன்னாள் ஒன்றிய செயலாளர். வெங்கட்ரத்தினம், ரவி, பிரபாகரன், ஹேமலதா பாலாஜி, ஏகாம்பரம், கீழ்விதி ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர். சோமசுந்தரம் மற்றும் பொதுமக்கள் இதில் கலந்து கொண்டனர். இறுதியில் கேப்டனின் நினைவு போற்றி அன்னதானம் மற்றும் மேடை நாடகம் நடைபெற்றது.


- செய்தியாளர் பிரகாசம்
நெமிலி தாலுகா

No comments:

Post a Comment

Post Top Ad