இராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா அறிஞர் அண்ணா அரசினர் மகளிர் கலைக் கல்லூரியில் மாணவ - மாணவிகளுக்கு சைபர் கிரைம் விழிப்புணர்வு நிகழ்ச்சி இராணிப்பேட்டை உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் பிரபு தலைமையில் நடத்தப்பட்டது. சைபர் கிரைம் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் நிதி நிறுவன மோசடி,போலி சமூக ஊடக கணக்குகள் மோசடி,போலி கடன் செயலி மற்றும் சைபர் கிரைம் உதவி எண்:1930 , www.cybercrime.gov.in இணையதள முகவரி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் ஆற்காடு தாலுக்கா வட்ட காவல் ஆய்வாளர் சாலமன் ராஜா , சைபர் கிரைம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் . உதவி ஆய்வாளர் அன்பழகன், 400 கல்லூரி மாணவிகள் மற்றும் 10 ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment