இந்த விழாவிற்கு துணைத் திட்ட அலுவலர்கள் மோகன் பாபு, அன்பரசன் ஆகியோர் தலைமை தாங்கி விழாவினை தொடங்கி வைத்தனர், விழாவில் கலந்து கொண்ட சுய உதவிக் குழு பெண்கள், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளை விளக்கும் வகையிலும் அதனை தடுப்பதைப் பற்றியும் கோலத்துடன் ஓவியங்கள் மற்றும் விழிப்புணர்வு வாசகங்களை எழுதி வைத்தனர் அதனைத் தொடர்ந்து ஓச்சேரி அரசு உயர்நிலைப் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியர் பாக்கியராஜ் ஒருங்கிணைப்பில் கயிறு, இழுத்தல், கபடி,பாடல் போட்டி போன்ற பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.
விழாவில் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்ட ஓச்சேரி அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் எம்.சதாசிவம், ஆயர்பாடி கிராம நிர்வாக அலுவலர் என்.புகேந்தி, ஓச்சேரி தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் ஏ.விஜயலட்சுமி ஆகியோர் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினர், இந்த விழாவில் 200க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
No comments:
Post a Comment