வாலாஜா நகராட்சி முன்பு நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் பொதுநல சங்கம் சார்பாக அன்னதான நிகழ்ச்சி நடைபெற்றது. - தமிழக குரல் - இராணிப்பேட்டை.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday 4 January 2024

வாலாஜா நகராட்சி முன்பு நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் பொதுநல சங்கம் சார்பாக அன்னதான நிகழ்ச்சி நடைபெற்றது.

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா பேட்டை நகராட்சி முன்பு நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் பொதுநல சங்கம் சார்பாக தேசிய நுகர்வோர் தினத்தை முன்னிட்டு நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் பொதுநல சங்க மாவட்டச் செயலாளர் த. சசிகுமார் தலைமையில்  அன்னதானம் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாநில சமூக நல துணைச் செயலாளர் எஸ்.எம்.முகமது அலி முன்னிலை வகித்தார். 

மேலும் இந்நிகழ்ச்சியில் ஆற்காடு காவல் ஆய்வாளர் விநாயகமூர்த்தி வாலாஜா காவல் நிலையம்(பொறுப்பு ), தனி வருவாய் ஆய்வாளர் பாஸ்கரன் மற்றும் உதவி ஆய்வாளர்  மகாராஜன் ஆகியோர் பொது மக்களுக்கு  அன்னதானம் வழங்கி நிகழ்ச்சியை துவக்கி வைத்தனர்.


மேலும் மாவட்ட பொருளாளர் ஜே.சிவகுமார் மற்றும் மாவட்ட இணை பொருளாளர் ஆர்.சிவகுமார் மற்றும் மாநில சமூக நல இணைச் செயலாளர்  ஆர்.விவேக் ஆகியோர் அனைவரையும் வரவேற்றனர். இந்த நிகழ்ச்சியில் மாவட்டச் செயலாளர் அவர்கள்  சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட அனைவருக்கும்  சால்வை அணிவித்து கௌரவித்தார். மேலும் சுமார் 500-க்கும் மேற்பட்ட பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. 


இந்த நிகழ்ச்சியில் மாவட்ட சமூக நல செயலாளர் பா.கணேசன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்  ஜி அருள் மற்றும் சங்க நிர்வாகிகள் உறுப்பினர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.


- சிறப்பு செய்தியாளர் ஆர் ஜே.சுரேஷ்குமார் செய்திகள் மற்றும் விளம்பர தொடர்புக்கு:9150223444.

No comments:

Post a Comment

Post Top Ad