வாலாஜா நகராட்சி மார்க்கெட் நடுநிலைப்பள்ளியில் இலவச கண் சிகிச்சை முகாம். - தமிழக குரல் - இராணிப்பேட்டை.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Sunday 7 January 2024

வாலாஜா நகராட்சி மார்க்கெட் நடுநிலைப்பள்ளியில் இலவச கண் சிகிச்சை முகாம்.


ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா  இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி,  ஜேசிஐ வாலாஜாபேட்டை சில்க் சிட்டி, அரவிந்த் கண் மருத்துவமனை, ராணிப்பேட்டை மாவட்ட கண்பார்வை இழப்பு தடுப்பு சங்கம் ஆகிய அமைப்புகள் இணைந்து  ஒவ்வொரு மாதமும் வாலாஜா நகராட்சி மார்க்கெட் நடுநிலைப்பள்ளியில் இலவச கண் சிகிச்சை  முகாம் நடத்துவது வழக்கம் அந்த வகையில்  இந்த மாதம் சாத்தம்பாக்கம் மறைந்த முருகானந்தம், சரச காந்தம்மாள் இரண்டாம் ஆண்டு  நினைவாக இந்த முகம் நடத்தப்பட்டது

இந்த முகாமிற்கு ஐ ஆர் சி எஸ் சேர்மன் அக்பர் ஷெரீப்  தலைமை தாங்கினார் ஜே சி ஐ செயலாளர் டி கே குமார் முன்னிலை வகித்தார், ஜேசிஐவி. வெங்கடேசன் சிறப்பு விருந்தினர்களை வரவேற்றார் ஸ்ரீ விஜயலட்சுமி பேக்கரி இனிப்பகம் தலைவர் எம்.ராஜா, சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு முகாமினை தொடங்கி வைத்தார், நேஷனல் வெல்பர் அசோசியேஷன் தலைவர் முகமது ஆயூப் முகாமில் கலந்து கொண்ட முதியவர்களுக்கு போர்வைகள் வழங்கினார். இந்த முகாமில் 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர் மேலும் சேர்ந்து வாலாஜாபேட்டை சேர்ந்த சமூக ஆர்வலர் ஏஸ்.அலிம்அஹமத் அவர்களை வாலாஜாபேட்டை அரசு தலைமை மருத்துவமனைக்கு 250 கிலோ வாட் மின்மாற்றி அமைத்து தந்ததற்காக அவரை பாராட்டி சால்வை அணிவித்து மரியாதை செய்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad