ராணிப்பேட்டை மாவட்டம் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவன தலைவர். கேப்டன் விஜயகாந்த் அவர்களின் படத்திறப்பு விழா மாவட்ட நிர்வாகத்தின் வழிகாட்டுதலின்படி நெமிலி மேற்கு ஒன்றிய தேமுதிக கழகத்தின் சார்பில் நெமிலி பேருந்து நிலையத்தில் நடைபெற்றது. மாவட்ட நிர்வாகிகள் சார்பில் நெமிலி பொன்னியம்மன் ஆலயத்தில் இருந்து நெமிலி பேருந்து நிலையம் வரை மௌன அஞ்சலி செலுத்தி கேப்டன் அவர்களின் திருவுருவ படத்திற்கு மலர் மாலை தூவி அஞ்சலி செலுத்தினர்.
இதில் மாவட்ட, ஒன்றிய, நகர, கிளைக்கழக மகளிர் அணி, சார்பு அணி நிர்வாகிகள், வன்னியர் சங்க நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் இதில் கலந்து கொண்டனர். நெமிலி மற்றும் பணப்பாக்கம் பேரூராட்சியை சேர்ந்த கழக நிர்வாகிகள் இதை இணைந்து நடத்தினர். இறுதியில் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
- செய்தியாளர் பிரகாசம் நெமிலி தாலுகா
No comments:
Post a Comment