ராணிப்பேட்டை மாவட்டம் தமிழக முன்னாள் முதல்வரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான. எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் ஆணைக்கிணங்க, ராணிப்பேட்டை கிழக்கு மாவட்ட செயலாளரும், அரக்கோணம் சட்டமன்ற உறுப்பினருமான சு.ரவி எம்.எல்.ஏ அவர்களின் பரிந்துரையின் பேரில் வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் அரக்கோணம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக போட்டியிட நெமிலி நகர அதிமுக பொருளாளர். நவநீதகிருஷ்ணன் அவர்கள் சென்னை எம்.ஜி.ஆர் மாளிகையில் நடைபெற்ற தேர்தல் விருப்ப மனு ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்டு தலைமை கழக நிர்வாகிகளிடம் டெபாசிட் பணம் செலுத்தி விருப்ப மனு தாக்கல் செய்தார். இதில் மாவட்ட இளைஞர் அணி துணை செயலாளர். டோமேஷ், மாணவர் அணி செயலாளர். முருகன், கவுன்சிலர். சங்கர், நிர்வாகிகள். பரந்தாமன், சுகுமார் ஆகியோர் உடன் இருந்தனர்.
- செய்தியாளர் பிரகாசம் நெமிலி தாலுகா
No comments:
Post a Comment