நெமிலியில் திமுக சார்பில் பேரறிஞர் அண்ணா-வின் நினைவு நாள் அனுசரிப்பு! - தமிழக குரல் - இராணிப்பேட்டை.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday 3 February 2024

நெமிலியில் திமுக சார்பில் பேரறிஞர் அண்ணா-வின் நினைவு நாள் அனுசரிப்பு!


ராணிப்பேட்டை மாவட்டம் பேரறிஞர் அண்ணா அவர்களின் 55 ஆம் ஆண்டு நினைவுநாளை அனுசரிக்கும் விதமாக நெமிலி மேற்கு மற்றும் மத்திய ஒன்றிய திமுக சார்பில் நெமிலியில் உள்ள பேரறிஞர் அண்ணா அவர்களின் திருஉருவ சிலைக்கு நெமிலி மேற்கு ஒன்றிய செயலாளர் ஆர். பி. ரவீந்திரன் தலைமையில் நெமிலி மத்திய ஒன்றிய செயலாளர் எஸ். ஜி. சி. பெருமாள் அவர்கள் முன்னிலையில் நடைப்பெற்றது. 

இதில் சிறப்பு அழைப்பாளர் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர். சுந்தராம்பாள் பெருமாள் கலந்துக்கொண்டு பேரறிஞர் அண்ணா-வின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மௌன அஞ்சலி செலுத்தினார். இதில் நெமிலி மத்திய ஒன்றிய அவை தலைவர். பா. செ. நரசிம்மன், முன்னாள் நெமிலி பேரூர் செயலாளர். கார்த்திகேயன், நெமிலி மத்திய ஒன்றிய துணை செயலாளர். சீனிவாசன், நெமிலி மேற்கு ஒன்றிய துணை செயலாளர். சம்பத், மாவட்ட விவசாய தொழிலாளர் அணி தலைவர். சண்முகம், நெமிலி மேற்கு ஒன்றிய பொருளாளர். பிரகாஷ், மாவட்ட பிரதிநிதி. சம்பத், நெமிலி பேரூர் மாவட்ட பிரதிநிதி. சுகுமார், நெமிலி மத்திய ஒன்றிய இளைஞர் அணி. எல்லப்பன், நெமிலி மத்திய ஒன்றிய சுற்று சூழல் அணி அமைப்பாளர். முரளி முக்கேஷ், நெமிலி மேற்கு ஒன்றிய சுற்று சூழல் அணி அமைப்பாளர். ராஜராஜன், ஒன்றிய இளைஞர் அணி. சதீஷ், நவீன், தனசெழியன், கிளை கழக செயலாளர்கள். சிவராமன், கோபிநாத், குணசேகரன், இளங்கோ, பார்த்திபன் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 


- செய்தியாளர் பிரகாசம் நெமிலி தாலுகா. 

No comments:

Post a Comment

Post Top Ad