இராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த ரெட்டிவலம் கிராமத்தில் சோளிங்கர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திமுக வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இதில் நெமிலி மத்திய ஒன்றிய திமுக செயலாளர் எஸ்.ஜி.சி.பெருமாள் தலைமை தாங்கினார். நெமிலி மேற்கு ஒன்றிய செயலாளர் ஆர்.பி.ரவீந்திரன், மாவட்ட துணை செயலாளர். துரை மஸ்தான் ஆகியோர் முன்னிலை வகித்தனர், பனப்பாக்கம் நகர செயலாளர். சீனிவாசன் வரவேற்புரை வழங்கினார்.
இதில் சிறப்பு அழைப்பாளராக அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதி தேர்தல் பணி பொறுப்பாளர். சூர்யா வெற்றிக்கொண்டான் கலந்து கொண்டு முகவர்களுக்கு தேர்தல் பணிகளை எவ்வாறு செய்யவேண்டும் என்று ஆலோசனை வழங்கினார்.இதில் மாவட்ட துணை செயலாளர். சிவானந்தம், நெமிலி பேரூர் செயலாளர். ஜனார்த்தனன், நெமிலி மேற்கு ஒன்றிய துணை செயலாளர்கள். சீனிவாசன், வெங்கடேசன், பொருளாளர். செல்வம், திமுக நிர்வாகி. எல்லப்பன் மற்றும் நகர, ஒன்றிய, கிளை கழக நிர்வாகிகள் இதில் கலந்து கொண்டனர்.
- செய்தியாளர் பிரகாசம் நெமிலி தாலுகா.
No comments:
Post a Comment