ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி மத்திய ஒன்றிய திமுக சார்பில் புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு காட்டுப்பாக்கத்தில் அமைந்துள்ள அண்ணல் அம்பேத்கர் சிலைக்கு நெமிலி மத்திய ஒன்றிய திமுக செயலாளர் எஸ்.ஜி.சி.பெருமாள் தலைமையில் மாலை அணிவித்து சமத்துவ உறுதிமொழி எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதில் திமுகவின் நெமிலி மத்திய ஒன்றிய அவை தலைவர். நரசிம்மன், நெமிலி மத்திய ஒன்றிய கழகத் துணைச் செயலாளர். சீனிவாசன், நெமிலி மத்திய ஒன்றிய கழகத் துணைச் செயலாளர். சரளா முரளி, நெமிலி மத்திய ஒன்றிய பொருளாளர். செல்வம், மாவட்ட பிரதிநிதி. சம்பத், மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை அமைப்பாளர். கோபாலகிருஷ்ணன், நெமிலி மத்திய ஒன்றிய சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர். முரளி முக்கேஷ், இளைஞர் அணி. வெங்கட், சதீஷ், முகாம் செயலாளர். விசிக சிலம்பு, காட்டுப்பாக்கம் கிளை கழக செயலாளர்கள். ரவி, ஆனந்தன், பிச்சாண்டி, பேங்க் ரவி, தீனதயாளன் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
- செய்தியாளர் பிரகாசம் நெமிலி தாலுகா
No comments:
Post a Comment