இதில் சிறப்பு அழைப்பாளராக சுற்றுச்சூழல் அணியின் மாநில துணைச் செயலாளர் ஆர்.வினோத் காந்தி மற்றும் வழக்கறிஞர் அணியினர் கலந்து கொண்டு தேர்தல் பணி குறித்து பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்கள். இதில் அரக்கோணம் சட்டமன்ற தொகுதி தலைமை தேர்தல் பொறுப்பாளர். சூர்யா வெற்றி கொண்டான், சோளிங்கர் சட்டமன்றத் தொகுதி தேர்தல் பொறுப்பாளர். பாஸ்கர், தலைமை செயற்குழு உறுப்பினர் மு.கண்ணையன், மாவட்ட மகளிர் தொண்டரணி அமைப்பாளர். பவானி வடிவேலு, மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர். நந்தகுமார், ஆகியோர் பல்வேறு ஆலோசனைகளை வழங்கி சிறப்புரை ஆற்றினர்.
இதில், நெமிலி கிழக்கு ஒன்றியம் மற்றும் அரக்கோணம் மேற்கு ஒன்றிய கழக நிர்வாகிகள் மற்றும் வாக்குச்சாவடி நிலை முகவர்கள், (BLA-2) வாக்குச்சாவடி ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் நிர்வாகிகள் இதில் கலந்து கொண்டனர்.
- செய்தியாளர் பிரகாசம் நெமிலி தாலுகா
No comments:
Post a Comment