நெமிலி அருகே தென்மாம்பாக்கம் கிராமத்தில் சிமெண்ட் தரை இல்லாத துவக்கப்பள்ளி வளாகம்! - தமிழக குரல் - இராணிப்பேட்டை.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday 19 April 2024

நெமிலி அருகே தென்மாம்பாக்கம் கிராமத்தில் சிமெண்ட் தரை இல்லாத துவக்கப்பள்ளி வளாகம்!


ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி வட்டம், பனப்பாக்கம் அடுத்த தென்மாம்பாக்கம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி மற்றும் அங்கன்வாடி மையம் இரண்டும் ஒரே வளாகத்திற்குள் செயல்பட்டு வருகிறது. துவக்கப்பள்ளி கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு இரண்டு மாதங்களுக்கு மேலாகியும் பள்ளியின் வளாகத்திற்கு இன்னும் சிமெண்ட் தரை அமைக்கவில்லை அங்கன்வாடி மையத்தில் 20 குழந்தைகளும், பள்ளியில் 25 மாணவர்களும் படித்து வருகின்றனர். பள்ளியின் வளாகத்தில் முரம்பு மண் பரப்பப்பட்டுள்ளதால் அதிலுள்ள சிறு சிறு கற்கள் குழந்தைகளின் பாதங்களில் குத்துவதால் குழந்தைகள் சென்று வர சிரமப்படுகின்றனர். 


அங்குள்ள குழாயின் கழிவுநீர் வெளியேறும் பகுதி சரி செய்யப்படாமல் உள்ளது பள்ளியின் முகப்பு பெயர் பலகை இல்லாமல் பள்ளி செயல்பட்டு வருகிறது. பள்ளி குழந்தைகளின் நலன் கருதி சம்பந்தப்பட்ட நிர்வாகம் இதற்கு தீர்வு காண வேண்டும்? என்று தென் மாம்பாக்கம் கிராம மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


- செய்தியாளர் பிரகாசம் நெமிலி தாலுகா. 

No comments:

Post a Comment

Post Top Ad