ஆற்காடு நகரில் மஹாவீரர் ஜெயந்தியை முன்னிட்டு மேளதாளங்கள் முழங்க பல்லாக்கு ஊர்வலம். - தமிழக குரல் - இராணிப்பேட்டை.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Sunday, 21 April 2024

ஆற்காடு நகரில் மஹாவீரர் ஜெயந்தியை முன்னிட்டு மேளதாளங்கள் முழங்க பல்லாக்கு ஊர்வலம்.


ஆற்காடு கலவைரோடு பஜார் தெருவில் உள்ள வாசுபுஜ்ஜிய மாகாவீரர் ஜெயின் ஆலயத்திலிருந்து இன்று மஹாவீர் ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு அரிசியை கொண்டு வழிபாடு நடத்தினார்கள்  மேளதாளங்கள் முழங்க மஹாவீரர் சிலை மற்றும் திரு உருவ படம் அலங்கரிக்கப்பட்ட வண்டியில் வைத்து  முன்னர் செல்ல மேளதாளங்ககுடன் நடனமாடிய படி ஜெயின் சமுதாய ஆண்கள் பெண்கள் குழந்தைகள் என நூற்றுக்கணக்கானோர் பாடல்களை பாடிய படி ஊர்வலமாக ஆற்காடு நகரின் முக்கிய வீதிகளின் வழியாக சென்று மீண்டும் ஊர்வலம் அந்த ஆலயத்தை அடைந்தது.


இந்த ஊர்வலத்தில் உயிர்களை கொல்ல கூடாது மது அருந்த கூடாது என மஹாவீரரின் கொள்கைகளையும் கூறி விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Top Ad