ராணிப்பேட்டை மாவட்டம் ராணிப்பேட்டை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் ஏதிரே தமிழகத்தில் மின் கட்டண உயர்வு மக்களின் அனைத்து வரிகள் ஆகியவற்றை உயர்த்திய தமிழக அரசை கண்டித்து அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மாவட்ட அவைத்தலைவர் பாண்டுரங்கன் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான அமமுக கட்சி சார்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர் அமமுக கட்சியின் அவைத்தலைவர் கோபால் சிறப்பு விருந்தினராக பங்கேற்று கண்டன உரையாற்றினார். இதில் மின்கட்டண உயர்வு, மக்களின் வரி உயர்வுகள் உள்ளிட்ட சம்பவங்களை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தமிழக அரசுக்கு எதிராக மாபெரும் கண்டன கோஷங்களை எழுப்பினர். மேலும் அனைத்து சம்பவங்களுக்கும் பொறுப்பேற்று ஆளும் தமிழக அரசு பதவி விலக வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.
- செய்தியாளர் ஆர்ஜே.சுரேஷ் செய்திகள் மற்றும் விளம்பர தொடர்புக்கு:9150223444.
No comments:
Post a Comment