சிறந்த காவல் நிலையங்களுக்கான தமிழ்நாடு முதலமைச்சரின் கோப்பை பெற்ற ராணிப்பேட்டை காவல் நிலைய ஆய்வாளரை பாராட்டிய மாவட்ட எஸ் பி கிரண்ஸ்ருதி. - தமிழக குரல் - இராணிப்பேட்டை.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday, 23 July 2024

சிறந்த காவல் நிலையங்களுக்கான தமிழ்நாடு முதலமைச்சரின் கோப்பை பெற்ற ராணிப்பேட்டை காவல் நிலைய ஆய்வாளரை பாராட்டிய மாவட்ட எஸ் பி கிரண்ஸ்ருதி.


ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை 22.07.2024 தேதி இராணிப்பேட்டை மாவட்டத்தின் கடந்த 2022 ஆண்டிற்கான சிறந்த காவல் நிலையமாக ராணிப்பேட்டை காவல் நிலையம்  தேர்வு செய்யப்பட்டு தமிழ்நாடு முதலமைச்சரின் சிறந்த காவல் நிலையத்திற்கான கோப்பை வழங்கப்பட்டது.
 

இந்த கோப்பையை இன்று 23.07.2024 தேதி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வி.D.V கிரண் ஸ்ருதி அவர்களிடம் ராணிப்பேட்டை காவல் ஆய்வாளர்  பார்த்தசாரதி அவர்கள்  காண்பித்து வாழ்த்து பெற்றார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் இதேபோன்று எப்போதும் சிறந்து விளங்க வேண்டும் என்று வாழ்த்தினார் உடன் ராணிப்பேட்டை உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு.பிரபு அவர்கள், தனிப்பிரிவு ஆய்வாளர் அருண்குமார் அவர்கள் மற்றும் இராணிப்பேட்டை உதவி ஆய்வாளர் அண்ணாமலை ஆகியோர்கள் இருந்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad