மேல்விஷாரம் MCC குப்பை கிடங்கில் நேற்று இரவு தீயிட்டு கொளுத்திய சமூக விரோதிகள்; போலீசார் விசாரணை. - தமிழக குரல் - இராணிப்பேட்டை.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday 23 July 2024

மேல்விஷாரம் MCC குப்பை கிடங்கில் நேற்று இரவு தீயிட்டு கொளுத்திய சமூக விரோதிகள்; போலீசார் விசாரணை.


மேல்விஷாரம் நகராட்சிக்கு சொந்தமான ஹன்சா நகரில் அமைந்துள்ள MCC குப்பை கிடங்கில் தரம் பிரிப்பதற்காக சேமித்து வைக்கப்பட்டிருந்த குப்பைகளை நேற்று இரவு சமூக விரோதிகள் தீயிட்டு கொளுத்தியுள்ளனர்.

 

அதனைத் தொடர்ந்து  மாவட்ட காவல் துறை துணை கண்காணிப்பாளர் பிரபு அவர்களின் தலைமையில் நகர காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளர்கள் ஹன்சா நகர் குப்பை கிடங்கை நேரில் சென்று பார்வையிட்டனர். இதில் நகர மன்ற துணைத் தலைவர் S.குல்சார் அஹமத் அவர்கள் மற்றும் நகர மன்ற உறுப்பினர்கள் உடன் இருந்தனர்.


மேலும் மாவட்டத் துணை கண்காணிப்பாளர் அவர்கள் கூறுகையில் பொது சொத்துக்களுக்கு சேதம்  விளைவிப்பவர்கள் மீதும் சமூகவிராத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீதும்  அவர்களின் பின்புலத்திலிருந்து இயக்குபவர்கள் மீதும் காவல்துறை தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை தெரிவித்தார்.


மாவட்ட செய்தியாளர் ஆர் ஜே சுரேஷ் செய்திகள் மற்றும் விளம்பர தொடர்புக்கு:9150223444. 

No comments:

Post a Comment

Post Top Ad