விஸ்வ ஹிந்து பரிஷத் 60-வது ஆண்டு நிறைவு விழா. - தமிழக குரல் - இராணிப்பேட்டை.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday 31 August 2024

விஸ்வ ஹிந்து பரிஷத் 60-வது ஆண்டு நிறைவு விழா.


ராணிப்பேட்டை மாவட்டம் விஷ்வ ஹிந்து பரிஷத் 60 வது ஸ்தாபன தினத்தை முன்னிட்டு மாபெரும் நிறைவு விழா திமிரி ஒன்றியம் புங்கனூர் கிளையில் நடைபெற்றது இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளர் ஜே.முத்துவேல் தலைமை தாங்கினார் மாவட்ட இணை செயலாளர்கள் மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.


மாநிலச் செயலாளர் அரசு வழக்கறிஞர்  மணிமாறன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு புங்கனூர்  கிராமத்திலுள்ள பிள்ளையார் கோவில் அருகில் விஸ்வ இந்து பரிஷத் கொடியை ஏற்றி வைத்து கோ.பூஜையில் கலந்து கொண்டார் அதனைத் தொடர்ந்து  பெயர் பலகையை திறந்து வைத்தார்.

 
கைலாயவாத்தியம் மற்றும் பஜனை குழுவினரால்   பாடல்களை பாடிக்கொண்டு  கிராமிய கலை கோலாட்டத்துடன்  பொதுமக்கள் படைச்சசூழ ஊர்வலமாகச் சென்றனர் அங்கு சிவன் கோவிலில் வழிபாடு செய்த பின்னர் , அம்மனை வழிபட்டனர் தொடர் நிகழ்ச்சியாக அம்மன் கோவில் மண்டப வளாகத்தில் சிறு பிள்ளைகளின் வரவேற்பு நடனம் முடிந்தவுடன்  இயக்க  ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.


இக்கூட்டத்தில் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்  நிகழ்ச்சியின் இறுதியில் அனைவருக்கும் அறுசுவை உணவு வழங்கப்பட்டது ஒன்றிய தலைவர் நன்றி கூறினார்.

No comments:

Post a Comment

Post Top Ad