நெமிலி ஒன்றியம், அசநெல்லிகுப்பம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் - பள்ளி மேலாண்மைக் குழு மறு கட்டமைப்பு - புதிய நிர்வாகிகள் தேர்வு - தமிழக குரல் - இராணிப்பேட்டை.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday 31 August 2024

நெமிலி ஒன்றியம், அசநெல்லிகுப்பம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் - பள்ளி மேலாண்மைக் குழு மறு கட்டமைப்பு - புதிய நிர்வாகிகள் தேர்வு


இராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி ஒன்றியம்,  அசநெல்லிகுப்பம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்  பள்ளியில் பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு புதிய நிர்வாகிகள் தேர்தல் நேற்று நடைபெற்றது. தலைமை ஆசிரியர் பெ.மகேஷ் தலைமை தாங்கினார். அரசு தரப்பில் நெமிலி வட்டார வளமைய மேற்பார்வையாளர்  தா.பாலு  கலந்து கொண்டு சிறப்பித்தார். மேலும் இவர் முன்னிலையில் தேர்தல் மிகச் சிறப்பாக நடைபெற்றது.



இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக ஊராட்சி மன்றத் தலைவர்  சேகர் ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் க.சங்கீதா கதிரவன்,  ஊராட்சி மன்ற துணைத் தலைவர் பா.வரலட்சுமி மற்றும் பெற்றோர்கள், கலந்து கொண்டனர் உள்ளாட்சி பிரதிநிதியாக ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் S.செந்தாமரை கண்ணன் R..கனியமுது  தேர்வு செய்யப்பட்டார்கள்.


கல்வியாளராக ம.கார்த்திகேயன் ஆசிரியர் உறுப்பினராக இப்பள்ளி  அறிவியல் பட்டதாரி  ஆசிரியர்  பி. பிந்து,  தேர்வு செய்யப்பட்டார்கள். பின்பு ஜனநாயக முறைப்படி நடைபெற்ற பள்ளி மேலாண்மைக் குழு மறு கட்டமைப்பு புதிய நிர்வாகிகள் தேர்தலில் SMC தலைவராக பா.மேனகா துணைத்தலைவராக பெ.தரணி  மொத்தமாக 24 உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.


தேர்வு செய்யப்பட்ட அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது. பின்பு அனைவரும்  உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். இதில் ஆங்கில பட்டதாரி ஆசிரியர் கொ.ஏ.உஷா, இடைநிலை ஆசிரியர்கள் மு.பூந்தளிர், செ.செல்வசௌந்தரி,  கு.பூங்கொடி ஆகியோர்  கலந்து கொண்டார்கள்.


இறுதியில் இப்பள்ளி  கணித பட்டதாரி ஆசிரியர்   ஏ.முருகன் நன்றி கூறினார்.

No comments:

Post a Comment

Post Top Ad