ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த சயனபுரம் கிராமத்தில் உள்ள அரசினர் மேல்நிலைப்பள்ளியில் மக்களுடன் முதல்வர் முகாம் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி மற்றும் இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர். சந்திரகலா அவர்கள் கலந்துகொண்டு முகாமினை தொடங்கி வைத்து, பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.
இந்நிகழ்ச்சியில், நெமிலி ஒன்றிய பெருந்தலைவர் பெ.வடிவேலு, சயனபுரம் ஊராட்சி மன்ற தலைவர். பவானி வடிவேலு, மாவட்ட கவுன்சிலர். சுந்தரம்மாள் பெருமாள், நெமிலி மத்திய ஒன்றிய திமுக செயலாளர் எஸ்.ஜி.சி பெருமாள், சிறுணமல்லி ஊராட்சி மன்ற தலைவர். ஜோதி அருணாச்சலம், ஆட்டுப்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர். நித்யா ராமதாஸ், கீழ்வெங்கடாபுரம் ஊராட்சி மன்ற தலைவர். அம்மு தட்சிணாமூர்த்தி, சயனபுரம் துணைத் தலைவர். சுகன்யா ரவி, மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இம்முகாமில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, தமிழ்நாடு மின்சார வாரியம், ஊரக வளர்ச்சி, ஊராட்சி துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை, காவல் துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலத்துறை, வாழ்வாதார கடன் உதவிகள் போன்ற பல்வேறு துறைகள் இடம்பெற்றன. இதில், சயனபுரம், கீழ்வெங்கடாபுரம், ஆட்டுப்பாக்கம், சிறுணமல்லி ஆகிய கிராமங்களில் இருந்து பொதுமக்கள் தங்கள் கோரிக்கை மனுக்களை அளித்தனர்.
- செய்தியாளர் பிரகாசம் நெமிலி தாலுகா
No comments:
Post a Comment