கலவை நகர அதிமுக சார்பில் பாஜக தலைவர் அண்ணாமலையை கண்டித்து ஆர்ப்பாட்டம். - தமிழக குரல் - இராணிப்பேட்டை.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday 27 August 2024

கலவை நகர அதிமுக சார்பில் பாஜக தலைவர் அண்ணாமலையை கண்டித்து ஆர்ப்பாட்டம்.


ராணிப்பேட்டை மாவட்டம் கடந்த வாரம் அண்ணாமலையை குறித்து எடப்பாடி பழனிசாமி உழைக்காமலேயே பதவிக்கு வந்தவர் தான் அண்ணாமலை என்றும், மைக்கை பார்த்தால் வியாதி போல பேட்டி கொடுக்க தொடங்கி விடுவார் என்றும் விமர்சனம் செய்தார். 

இதற்கு பதில் கொடுக்கும் விதமாக பேசிய அண்ணாமலை கூவத்தூரில் என்ன அநியாயத்தை செய்தீர்கள் டெண்டர் போல  தலைவரை தேர்வு செய்தீர்கள் எந்த எம்எல்ஏவுக்கு மாதமாதம் எவ்வளவு கொடுப்பது என்ற ஏலத்தில் தான்  தலைவர் தேர்வு செய்யப்பட்டார் என்று பழனிசாமியை கடுமையாக விமர்சனம் செய்தார், அண்ணாமலையின் இந்த  பேச்சை கண்டிக்கும் வகையில் தமிழக முழுவதும் அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் 


அந்த வகையில் நேற்று கலவைப் பேரூராட்சி நகர அதிமுக சார்பில் நகர செயலாளர் கே ஆர் சதீஷ் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது அப்பொழுது அண்ணாமலையின் உருவ பொம்மையை எரித்து செருப்பால் அடித்து காலால் மிதித்தனர் அப்பொழுது அங்கிருந்த கலவை போலீசார் தடுத்து நிறுத்தி எரிந்து கொண்டிருந்த உருவ பொம்மையின் மீது தண்ணீர் ஊற்றி அணைத்தனர்.


இந்த ஆர்ப்பாட்டத்தின் போது நகர மன்ற தலைவர் கலாசதீஷ்,  நகர அவை தலைவர் கே.வி. பாண்டுரங்கன், அப்துல்லா, மணிகண்டன், மாவட்டத் துணைச் செயலாளர் ஜிம் பிரபு, காமராஜ், கமலக்கண்ணன், யுவராஜ், துணைத் தலைவர் தண்டபாணி, கறிக்கடை சேகர், மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் எஸ்  தாமோதரன், புண்ணியகோட்டி, சக்தி முருகேசன், வடிவேல், சாதுல்லா, ஜெயவேலு, சரவணன், ரகுமான், கே.பாலாஜி உள்ளிட்ட முன்னணி பொறுப்பாளர்கள் மற்றும் கழகத் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad