இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் இளைஞர் நீதிச் சட்டம் 2015 ( குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு ) தொடர்பாக ஒரு நாள் திறன் வளர்ப்பு பயிற்சி வகுப்பு குழந்தைகள் நல காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கு எடுக்கப்பட்டது. இதில் இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வி D.V கிரண் ஸ்ருதி, இ.கா.ப., அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்.
இதில் துணைக் காவல் கண்காணிப்பாளர்கள் வெங்கடகிருஷ்ணன் (IUCAW), செல்வி. சந்திரலேகா (பயிற்சி) மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் செல்வி ப.அனுசியா குழந்தைகள் நலக்குழு தலைவர் வேதநாயகம் இளைஞர் நீதி குழும உறுப்பினர் நன்னடத்தை அலுவலர் வழக்கறிஞர் செல்வி. பவித்ரா, இளைஞர் நீதி குழும உறுப்பினர் ராஜ்குமார் நன்னடத்தை அலுவலர் ஏகாம்பரம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மாவட்ட செய்தியாளர் ஆர்ஜே. சுரேஷ் செய்திகள் மற்றும் விளம்பர தொடர்புக்கு:9150223444.
No comments:
Post a Comment