கலவை நல்லூர் சித்தார்த்தர் இலவச இரவு பாடசாலை & புத்த விகார் சார்பில் 78வது சுதந்திர தின விழா - தமிழக குரல் - இராணிப்பேட்டை.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday 15 August 2024

கலவை நல்லூர் சித்தார்த்தர் இலவச இரவு பாடசாலை & புத்த விகார் சார்பில் 78வது சுதந்திர தின விழா


ராணிப்பேட்டை மாவட்டம் கலவை அடுத்த நல்லூர் கிராமத்தில் செயல்பட்டு வரும் இரவு பள்ளி கூட்டமைப்பு  கலவை நல்லூர் சித்தார்த்தர் இலவச இரவு பாடசாலை & புத்த விகார் சார்பில் 78வது சுதந்திர தின விழா  கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கு இரவு பாடசாலை பொறுப்பாளர் நல்லூர் ராஜசேகர் தலைமை தாங்கினார் முன்னாள் கிராம உதவியாளர் N.M.முருகேசன், URPI மாவட்டத்தலைவர் R.தீர்த்தமலை, முன்னாள் ஊராட்சி மன்றத்தலைவர் M.ஏழுமலை, முன்னாள் ஊராட்சி மன்றத்தலைவர் விசிக மாவட்ட பொருளாளர் P.சம்பத், மு.கிளை செயலாளர் K.சேகர், சத்துணவு அமைப்பாளர் (Rtd.) கலவைநல்லூர் V.பழனி, ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

 

ஊராட்சி மன்ற தலைவர் ரேணுகா சங்கர் தேசிய கொடியேற்றி வைத்து  புரட்சியாளர் அம்பேத்கர் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்கினார் அதனைத் தொடர்ந்து நடைபெற்ற  இதில் இரவு பள்ளி மாணவ மாணவிகள் விளையாட்டு போட்டி பேச்சுப்போட்டி ஓவியப்போட்டி கட்டுரை போட்டி திருக்குறள் ஒப்பித்தல் போட்டி நடைபெற்றது போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்வின் போது இரவு பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். 

No comments:

Post a Comment

Post Top Ad