நெமிலி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு கூட்டம்! - தமிழக குரல் - இராணிப்பேட்டை.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday 17 August 2024

நெமிலி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு கூட்டம்!

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு 2024-2026 கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், மாணவர்களின் பெற்றோர்கள், முன்னாள் மாணவர்கள், இல்லம் தேடி கல்வி, தன்னார்வலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், சுய உதவிக் குழு உறுப்பினர், ஆசிரியர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். கூட்டத்திற்கு சிறப்பு விருந்தினராக கீழ்வெண்பாக்கம் நடுநிலைப்பள்ளி பொறுப்பு தலைமை ஆசிரியை பாரதி தலைமை தாங்கினார். பள்ளியின் தலைமை ஆசிரியை ஏ. வசந்தி அனைவரையும் வரவேற்று நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். 


பள்ளி மேலாண்மை குழுவின் புதிய தலைவராக. நிபாரா மற்றும் துணை தலைவராக. கவிதா, பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் பெற்றோர்களால் ஏக மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். புதிய தலைவராக மற்றும் துணை தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய உறுப்பினர்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்தார்கள். புதிய பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டு, உறுதிமொழி ஏற்கப்பட்டது.


- செய்தியாளர் பிரகாசம் நெமிலி தாலுகா

No comments:

Post a Comment

Post Top Ad