இராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த கீழ்வெங்கடாபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு புதிய நிர்வாகிகள் தேர்தல் நடைபெற்றது.
இப்பள்ளி பொறுப்பு தலைமை ஆசிரியர் மு.ச.இமயவரம்பன் அவர்கள் தலைமை தாங்கினார். இதில் பார்வையாளராக அசநெல்லிக்குப்பம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கணித பட்டதாரி ஆசிரியர் ஏ.முருகன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார். மேலும் இவர் முன்னிலையில் தேர்தல் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
கிராம வார்டு உறுப்பினர்கள். கௌரி, ரங்கநாதன், கிராம பொது மக்கள், பெற்றோர்கள், ஐடிகே ஆசிரியர்கள் மற்றும் இப்பள்ளி முன்னாள் மாணவர்கள் கலந்துக் கொண்டு சிறப்பித்தார்கள். பின்பு ஜனநாயக முறைப்படி நடைபெற்ற பள்ளி மேலாண்மைக் குழு மறு கட்டமைப்பு புதிய நிர்வாகிகள் தேர்தலில் எஸ்.எம்.சி தலைவராக ஜீவா அவர்களும், துணைத்தலைவராக தமிழ்ச்செல்வி அவர்களும் மற்றும் பல உறுப்பினர்களும் தேர்வு செய்யப்பட்டனர்.
தேர்வு செய்யப்பட்ட அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது. பின்பு அனைவரும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். இறுதியில் இப்பள்ளி இடைநிலை ஆசிரியர் த.அனிதா அவர்கள் நன்றிவுரை கூறினார்.
- செய்தியாளர் பிரகாசம் நெமிலி தாலுகா
No comments:
Post a Comment