ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த சயனபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு கூட்டம் முனைவர் மு கோபாலகிருஷ்ணன் அவர்களின் மேற்பார்வையில் பள்ளியின் தலைமை ஆசிரியர். பரிதாபீ மற்றும் ஆசிரியர்கள். விசாலாட்சி, சித்ரா, பிரபாவதி, செந்தாமரை ஆகியோர் முன்னிலையில் பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு செய்து தலைவர். அம்மு அவர்களும் மற்றும் துணைத் தலைவர். பரிமளா அவர்களும் மற்றும் உறுப்பினர்கள் அனைவரையும் தேர்ந்தெடுக்கப்பட்டது.
தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கு முனைவர் மு. கோபாலகிருஷ்ணன் மற்றும் தலைமை ஆசிரியர். பரிதாபீ சேர்ந்து வாழ்த்துக்களை தெரிவித்தார். இறுதியில் அனைவரும் உறுதி மொழி எடுத்துக் கொண்டனர்.
- செய்தியாளர் பிரகாசம் நெமிலி தாலுகா
No comments:
Post a Comment