ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி பேருந்து நிலையத்தில் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவன தலைவர். அமரர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் 72-வது பிறந்த நாளை முன்னிட்டு நெமிலி கிழக்கு ஒன்றிய தேமுதிக செயலாளர். மதியழகன் தலைமையில் கழக கொடி ஏற்றி விஜயகாந்த் அவர்களின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
இதில் நகர செயலாளர். அரிதாஸ், நகர அவைத்தலைவர். சேட்டு, ஒன்றிய அவைத்தலைவர். சிவக்குமார், பொருளாளர். ரவி, நெமிலி மேற்கு ஒன்றிய செயலாளர். ஸ்ரீதர், மத்திய ஒன்றிய செயலாளர். வினோத்குமார், துணை செயலாளர்கள், பிரதிநிதிகள். சாந்த மூர்த்தி, ராதிகா மதியழகன், குமரேசன், குமார், காண்டியப்பன் மற்றும் தேமுதிக கழக நிர்வாகிகள் இதில் கலந்துகொண்டனர். இதனைத் தொடர்ந்து பனப்பாக்கம் பேரூராட்சி சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேரூர் செயலாளர். காவி, பனப்பாக்கம் நகர துணை செயலாளர். யுவராஜ், தேமுதிக கழக நிர்வாகிகள். ரவி, பிரபாகரன், ஹேமலதா, பாலாஜி, ஏகாம்பரம் மற்றும் நகர, ஒன்றிய, கிளைக் கழக நிர்வாகிகள் இதில் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் இறுதியில் அனைவருக்கும் இனிப்பு மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.
- செய்தியாளர் பிரகாசம் நெமிலி தாலுகா
No comments:
Post a Comment