ராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் தியான பயிற்சி அமைப்பு மூலம் காவல் அதிகாரிகள் மற்றும் ஆளினர்களுக்கு தியான பயிற்சி மற்றும் ஓய்வுநிலை பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டி.வி கிரண் ஸ்ருதி இ.கா.பா. கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
இந்த தியானபயிற்சி வகுப்பில் தியான அமைப்பினர் மூலம் காவல்துறை அதிகாரிகளுக்கு அன்றாட மன அழுத்தம் போக்கும் வகையிலும் எதிர்மறை எண்ணங்கள் இருந்து நேர்மறை எண்ணங்களாக மாற்றும் வழிமுறைகளும், அன்றாட வாழ்வில் கடைபிடிக்க வேண்டிய நல்வழிகள் பற்றி எடுத்துரைக்கப்பட்டது. காவல்துறையினரும் நாள்தோறும் இதை கடைப்பிடித்தால் நல்ல ஆரோக்கியத்துடன் மன நிம்மதியாக இருக்கலாம் என்பதை தெரிந்து கொண்டனர்.
இந்த தியான பயிற்சி வகுப்பில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர். குணசேகரன் (சி.டபிள்யூ.சி), துணைக் காவல் கண்காணிப்பாளர்கள். திருமால் (இராணிப்பேட்டை உட்கோட்டம்) ரமேஷ் ராஜ் (டி.சி.பி), ராமச்சந்திரன் (டி.சி.ஆர்.பி), மாநில ஹார்ட்ஃபுல்னஸ் ஒருங்கிணைப்பாளர் எஸ். பிரகாஷ், வேலூர் மண்டல ஒருங்கிணைப்பாளர் என்.லட்சுமி நாராயணன், இராணிப்பேட்டை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஏ.எம் சங்கர் மற்றும் மாவட்ட பயிற்சியாளர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
- செய்தியாளர் பிரகாசம் நெமிலி தாலுகா
No comments:
Post a Comment