ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி வட்டத்திற்குட்பட்ட நெமிலி மற்றும் சயனபுரம் பகுதியில் உள்ள அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்வு நெமிலி காவல் நிலையம் சார்பில் நடைபெற்றது . ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டி வி கிரண் ஸ்ருதி இகாப உத்தரவின் நெமிலி காவல் நிலைய ஆய்வாளர் அறிவுறுத்தலின்படி மாணவர்களுக்கு போதையில்லா தலைமுறை உருவாக்குவதற்கு காவல்துறையினரும், பள்ளி ஆசிரியர்களும் இணைந்து நடத்திய மாபெரும் விழிப்புணர்வு காவல் உதவி ஆய்வாளர் ஏழுமலை மற்றும் முதல் நிலை காவலர். தனசேகரன் விழிப்புணர் பேச்சு மாணவ- மாணவிகள் இடத்தில் எடுத்துரைத்து மதுப்பழக்கம் மற்றும் புகை பிடிப்பதனால் ஏற்படும் தீமைகள் போதை சம்பந்தப்பட்ட வழக்குகள் ஏற்படும் தீமைகளையும் பெண்களுக்கு பாலியல் வன்கொடுமை தற்பொழுது சர்வ சாதாரணமாக நடைபெறுகிறது.
இதனை தடுப்பதற்கு என்னென்ன வழிமுறைகள், விதிமுறைகள் மேற்கொள்ள வேண்டும் என்பதை விளக்கமாக எடுத்துரைத்தார் இந்த விழிப்புணர் பேச்சு உற்சாகத்தை ஏற்படுத்தியது அதன்படி நடந்து கொள்கிறோம் என மாணவர் மாணவிகளும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். மேலும் முடிவில் பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், மாணவர்கள் ஏற்படுத்திய முதல் நிலை காவலர். தனசேகர் அவர்களுக்கு வாழ்த்துக்கள் பாராட்டுகளும் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment