நெமிலி அருகே அசநெல்லிகுப்பம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம்!. - தமிழக குரல் - இராணிப்பேட்டை.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Sunday 1 September 2024

நெமிலி அருகே அசநெல்லிகுப்பம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம்!.

ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி அடுத்த அசநெல்லிகுப்பம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு கூட்டம் மற்றும் புதிய நிர்வாகிகள் தேர்தல் நடைபெற்றது. இப்பள்ளி தலைமை ஆசிரியர் பெ.மகேஷ் அவர்கள் தலைமை தாங்கினார். இதில் பார்வையாளராக நெமிலி வட்டார வளமைய மேற்பார்வையாளர் தா.பாலு அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார். மேலும் இவர் முன்னிலையில் தேர்தல் நடைபெற்றது. 


இதில் சிறப்பு அழைப்பாளராக ஊராட்சி மன்றத் தலைவர் அ.சேகர், ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் க.சங்கீதா கதிரவன், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் பா.வரலட்சுமி அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். இதில் கிராம பொது மக்கள், பெற்றோர்கள், ஐடிகே ஆசிரியர்கள், இப்பள்ளி முன்னாள் மாணவர்கள், கல்வியின் மீது அக்கறை கொண்டவர்கள் மற்றும் பலர் கலந்துக் கொண்டு சிறப்பித்தார்கள். 


உள்ளாட்சி பிரதிநிதியாக ஊராட்சி வார்டு உறுப்பினர்கள். செந்தாமரை கண்ணன், தி.கனியமுது தேர்வு செய்யப்பட்டார்கள். கல்வியாளராக ம.கார்த்திகேயன் அவர்களும், ஆசிரியர் உறுப்பினராக இப்பள்ளி அறிவியல் பட்டதாரி ஆசிரியர் பி. பிந்து அவர்களும் தேர்வு செய்யப்பட்டார்கள். பின்பு ஜனநாயக முறைப்படி நடைபெற்ற பள்ளி மேலாண்மைக் குழு மறு கட்டமைப்பு புதிய நிர்வாகிகள் தேர்தலில் எஸ்எம்சி தலைவராக பா.மேனகா அவர்களும், துணைத்தலைவராக பெ.தரணி அவர்களும் மொத்தமாக 24 உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். 


தேர்வு செய்யப்பட்ட அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது. பின்பு அனைவரும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். இதில் ஆங்கில பட்டதாரி ஆசிரியர் கொ.ஏ.உஷா, இடைநிலை ஆசிரியர்கள். மு.பூந்தளிர், செ.செல்வசௌந்தரி, கு.பூங்கொடி, தா. கௌசல்யா மற்றும் உயர் தொழில்நுட்ப ஆய்வக பயிற்றுனர் பா.கைருநிஷா பேகம் அவர்களும் கலந்து கொண்டார்கள். இறுதியில் கணித பட்டதாரி ஆசிரியர் ஏ.முருகன் அவர்கள் நன்றிவுரை கூறினார்.


- செய்தியாளர் பிரகாசம் நெமிலி தாலுகா

No comments:

Post a Comment

Post Top Ad