ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி தாலுகா, 2022-2023 ஆம் ஆண்டின் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் நாகவேடு ஊராட்சி பாடி கிராமத்தில் ரூ.9,13,000/- மதிப்பீட்டில் நியாய விலை கடை கட்டிடம் கட்டும் பணிக்கான பூமிபூஜை நிகழ்ச்சி, ஊராட்சி மன்றத் தலைவர் திருமதி.ஆனந்தி சுப்பிரமணியன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக நெமிலி ஒன்றிய பெருந்தலைவர் பெ.வடிவேலுஅவர்கள் கலந்து கொண்டு கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டினார். இதில் ஒன்றிய துணை பெருந்தலைவர் சா.தீனதயாளன், ஒன்றியக் குழு உறுப்பினர், முருகேசன், ஊராட்சி மன்ற துணைத் தலைவர், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் ஒன்றிய பொறியாளர் மற்றும் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- செய்தியாளர் பிரகாசம் நெமிலி தாலுகா.

No comments:
Post a Comment