மே தினத்தை முன்னிட்டு நெமிலி ஒன்றியம் பனப்பாக்கம் பேருந்து நிலையத்தில் ஆட்டோ ஓட்டுநர்கள் நல சங்கம் சார்பில் மே தின கொண்டாட்டம்.
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி ஒன்றியம் பனப்பாக்கம் பேருந்து நிலையத்தில் பனப்பாக்கம் ஆட்டோ ஓட்டுநர்கள் நல சங்கம் சார்பில் கொடியேற்றி புதிய பெயர் பலகை திறந்து மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கி தொழிலாளர் தினம் கொண்டாடப்பட்டது.

சங்கத்தின் பெயர் பலகைக்கு தலைவர். ஜெயவேல் அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் செயலாளர்.சேகர், பொருளாளர். முனியாண்டி, துணைத்தலைவர்கள். அருள்,பிச்சைமணி, உறுப்பினர்கள். செல்லமுத்து, கருணாநிதி, சேட்டு, வினோத், ரமேஷ், பரந்தாமன், ஏழுமலை, தீனதயாளன், சரவணன், பிரசாந்த், அன்பரசு, பாலாஜி, குமரவேல், சத்தியசீலன், வெங்கடேசன், கோபி ஆகியோர் உடன் இருந்தனர்.
செய்தியாளர் பிரகாசம்
நெமிலி தாலுகா

No comments:
Post a Comment