ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த அகவலம் கிராமத்தில் டெங்கு, மலேரியா போன்ற நோய்கள் கொசுக்களின் மூலம் வருவதை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊராட்சி மன்ற தலைவர். ஆஷா மார்க்கண்டேயன் தலைமையில் ஒன்றிய கவுன்சிலர் கிருஷ்ணவேணி வெங்கடேசன் முன்னிலையில் கிராமத்தில் உள்ள ஒவ்வொரு தெருக்களிலும் கொசு மருந்து அடித்தனர்.
இதில் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் மீரா வினாயகம், வார்டு உறுப்பினர்கள் பிரியா பிரபு, சுரேஷ் கீதா, இளங்கோ கீதா, விஜி கோஷாலி, ஜெகன், செல்வா, அருண் ஆகியோர் உடன் இருந்தனர்.
- செய்தியாளர் பிரகாசம் நெமிலி தாலுகா.


No comments:
Post a Comment