பனப்பாக்கம் பேரூராட்சியில் 14.50 லட்சம் மதிப்பில் புதிய ரேஷன் கடை அமைச்சர் ஆர். காந்தி அவர்கள் திறந்து வைத்தார்! - தமிழக குரல் - இராணிப்பேட்டை.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday, 4 July 2023

பனப்பாக்கம் பேரூராட்சியில் 14.50 லட்சம் மதிப்பில் புதிய ரேஷன் கடை அமைச்சர் ஆர். காந்தி அவர்கள் திறந்து வைத்தார்!


ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கம் பேரூராட்சியில் 14.50 லட்சம் மதிப்பீட்டில் நெடும்புலி  தொடக்கக் கூட்டுறவு கடன் சங்க வளாகத்தில் புதிதாக கட்டப்பட்ட புதிய ரேஷன் கடையை கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர். ஆர். காந்தி, அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினர். ஜெகத்ரட்சகன் ஆகியோர் கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி ரேஷன் கடையை திறந்து வைத்தனர். 


இதில் மாவட்ட ஆட்சியர் ச. வளர்மதி, சோளிங்கர் சட்டமன்ற உறுப்பினர். முனிரத்தினம், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர். சுந்தராம்பாள் பெருமாள், நெமிலி ஒன்றிய பெருந்தலைவர் பெ. வடிவேலு, நெமிலி மத்திய ஒன்றிய செயலாளர் எஸ். ஜி. சி. பெருமாள், கூட்டுறவு வங்கி தலைவர். ரவீந்திரன், பேரூராட்சி தலைவர். கவிதா சீனிவாசன், பனப்பாக்கம் பேரூர் செயலாளர். என். ஆர். சீனிவாசன், நெமிலி பேரூர் செயலாளர். ஜனார்த்தனன் மற்றும் கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர். 


- செய்தியாளர் பிரகாசம் நெமிலி தாலுகா. 

No comments:

Post a Comment

Post Top Ad