ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கம் உள்வட்டம் மேலபுலம் புதூர் ஊராட்சியில் எம். என். ஆர். ஜி. எஸ் திட்டத்தின் கீழ் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் மற்றும் ஒரு லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை ராணிப்பேட்டை மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினரும், மாவட்ட திமுக மகளிர் அணி துணை அமைப்பாளருமான சுந்தரம்மாள் பெருமாள் அவர்கள் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.


இதில் நெமிலி மத்திய ஒன்றிய திமுக செயலாளர் எஸ். ஜி. சி. பெருமாள், நெமிலி மேற்கு ஒன்றிய செயலாளர் ஆர். பி. ரவீந்திரன், மேலப்புலம் ஊராட்சி மன்ற தலைவர். அனிதா நாராயணன், நெமிலி மத்திய ஒன்றிய துணை செயலாளர். வெங்கடேசன், மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர். மார்க்கண்டேயன், ஒன்றிய சுற்றுச்சூழல் அணி. அரிசங்கர், கிளை கழக செயலாளர்கள். ராஜமாணிக்கம், சத்யா, துரை, லிங்கநாதன் மற்றும் கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
- செய்தியாளர் பிரகாசம் நெமிலி தாலுகா.

No comments:
Post a Comment