ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த நாகவேடு கிராமத்தில் 15வது நிதிக்குழு மாநிய நிதியிலிருந்து ரூ. 18,24,000 மதிப்பீட்டில் 60,000 திட்ட கொள்ளளவு கொண்ட மேநீர்தேக்க தொட்டி கட்டுவதற்கான பூமி பூஜை ஊராட்சி மன்ற தலைவர். ஆனந்தி பாலசுப்ரமணியன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.


இதில் சிறப்பு அழைப்பாளராக நெமிலி ஒன்றிய பெருந்தலைவர் பெ. வடிவேலு அவர்கள் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார். இதில் நெமிலி ஒன்றிய துணை பெருந்தலைவர். தீனதயாளன், வட்டார வளர்ச்சி அலுவலர். சிவராமன், ஒன்றிய குழு உறுப்பினர். முருகேசன், வார்டு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- செய்தியாளர் பிரகாசம் நெமிலி தாலுகா.

No comments:
Post a Comment