நெமிலியில் பேரறிஞர் அண்ணா அவர்களின் 114 வது பிறந்தநாள் விழா கொண்டாட்டம்! - தமிழக குரல் - இராணிப்பேட்டை.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday, 15 September 2023

நெமிலியில் பேரறிஞர் அண்ணா அவர்களின் 114 வது பிறந்தநாள் விழா கொண்டாட்டம்!


ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலியில் முன்னாள் முதல்வர் அண்ணா அவர்களின் 114வது பிறந்தநாளை முன்னிட்டு நெமிலி மத்திய ஒன்றிய திமுக சார்பில் நெமிலி பேருந்து நிலையத்தில் உள்ள பேரறிஞர் அண்ணா சிலைக்கு நெமிலி மத்திய ஒன்றிய திமுக செயலாளர். எஸ்.ஜி.சி.பெருமாள் தலைமையில் மாலை அணிவித்து, மலர் தூவி பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. 

அதைத்தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்பு மற்றும் காலை உணவு வழங்கப்பட்டது. இதில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினரும், மாவட்ட திட்ட குழு உறுப்பினருமான. சுந்தரம்மாள் பெருமாள், பா.செ.நரசிம்மன், அ.சீனிவாசன், வெங்கடேசன், சரளா முரளி, பி.செல்வம், சம்பத், சி.ஜி.சண்முகம், கா.தே.தனசேகரன், கார்த்திகேயன், கோபாலகிருஷ்ணன், எல்லப்பன், வெங்கடேஷ், ஸ்டாலின், தனசெழியன், முரளி முக்கேஷ், ராஜராஜன், சதீஷ், மணிகண்டன், கருணாநிதி, வெ.ஏமத்குமார், மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர்.


- செய்தியாளர் பிரகாசம் நெமிலி தாலுகா 

No comments:

Post a Comment

Post Top Ad