தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் ப்ரீத்தி பரத்வாஜ்தலால், அவர்கள் தலைமையில் ராணிப்பேட்டை மாவட்டம், திமிரி, விலாரி கூட்டுரோடு எதிரில் உள்ள கேபிஜே தனியார் திருமண மண்டபத்தில் தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் சார்பில் குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு சிறப்பு அமர்வு, குழந்தைகள் நலன் சார்ந்த குறைகளைவு முகாமில் பென்னகர் பகுதியைச் சார்ந்த அரசு பள்ளி மாற்றுத்திறனாளி மாணவி செல்வி.ரேகா அவர்களுக்கு ரூ.5000/- மதிப்பீட்டிலான காதொலிக் கருவியினை வழங்கினார்கள்.
உடன் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலவலர் அனுசியா, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (குழந்தைகள் மற்றும் மகளிர் குற்றப்பிரிவு) குமார் துணை இயக்குநர் சுகாதாரம் மணிமாறன், நேர்முக உதவியாளர் பொது விஜயராகவன், குழந்தைகள் நலக்குழுமத் தலைவர் வேதநாயகம், மாற்றுத்திறனாளி நலஅலுவலர் சரவணகுமார் மற்றும் பலர் உள்ளனர்.
- சிறப்பு செய்தியாளர் ஆர்ஜே.சுரேஷ்குமார்.

No comments:
Post a Comment