- சிறப்பு செய்தியாளர் ஆர்ஜே.சுரேஷ்குமார்.
ராணிப்பேட்டை மாவட்டம் ரத்தினகிரி அடுத்த டிசி.குப்பம் கிராமத்தில் மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் கிருஷ்ணன் (45) என்பவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். அவரை கொலை செய்த அதே பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் கிருபாகரன்(32) என்பவர் தலைமறைவானார். மேலும் சடலத்தை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தப்பி ஓடிய கிருபாகரனை இரத்தினகிரி போலீசார் தேடி வருகின்றனர்.

No comments:
Post a Comment