மத்திய அரசின் புதிய தூய்மை இந்தியா சுவஜ் பாரத் மிஜன் விழிப்புணர்வு திட்டத்தினை மாவட்ட ஆட்சியர் வளர்மதி தூய்மை பணியாளர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டார், அக்டோபர் 1ம் தேதி நாடு முழுவதும் மத்திய அரசின் புதிய தூய்மை இந்தியா (சுவஜ் பாரத் மிஜன் )திட்டத்தின் மூலம் தூய்மை பணி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தபட்டு வருகிறது அந்த வகையில் இந்த ஆண்டு நாடு முழுவதும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் காலை 10 மணி முதல் 11 மணி வரை ஒரு மணி நேரம் ரயில் நிலையம் பேருந்து நிலையம் என மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பொது இடங்களில் தூய்மைப் பணி மேற்கொள்ளபட்டது.
இந்நிலையில், ராணிப்பேட்டை மாவட்டம் முத்துக்கடை நிலையத்தில் நடைபெற்ற தூய்மைப் பணியினை மாவட்ட ஆட்சியர் வளர்மதி துவக்கி வைத்ததோடு மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களில் நேரில் சென்று அங்குள்ள தூய்மை பணியை தானே மேற்கொண்டு தூய்மை பணி குறித்து தூய்மை பணியாளர்களுடன் ஆட்சியர் உறுதிமொழி எடுத்துக் கொண்டார் சிறப்பு செய்தியாளர் சுரேஷ்குமார்.

No comments:
Post a Comment