காவேரிப்பாக்கம் காவல் நிலையத்தில் டிஜஜி ஆய்வு!!!. - தமிழக குரல் - இராணிப்பேட்டை.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday, 6 October 2023

காவேரிப்பாக்கம் காவல் நிலையத்தில் டிஜஜி ஆய்வு!!!.


வேலூர் சரக காவல்துறை துணைத் தலைவர் முனைவர் . M.S.முத்துசாமி இ.கா.ப., அவர்கள் இன்று ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் உட்கோட்டம், காவேரிப்பாக்கம் காவல் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார். காவேரிப்பாக்கம் வட்ட அலுவலகத்திலுள்ள அனைத்து பதிவேடுகளையும் ஆய்வு செய்தார். மனுக்கள் மீதான விசாரணை மற்றும் நிலுவையிலுள்ள மணுக்கள் பற்றி கேட்டறிந்தும், நிலுவையிலுள்ள மனுக்களை உடனடியாக விசாரணை மேற்கொண்டு தீர்வு காணவும் உத்தரவிட்டார். 

வழக்கு கோப்புகளை பார்வையிட்டு துரித நடவடிக்கை எடுக்கவும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பதிவான வழக்குகளில் விரைந்து புலன் விசாரணை முடித்து குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்து வழக்கை நீதிமன்றத்தில் உரிய நேரத்தில் நடத்தி குற்றவாளிகளுக்கு விரைந்து தண்டனை பெற்றுத்தருமாறும் அறிவுறுத்தினார். 


மேலும், காவல் நிலைய அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களிடம் பொதுமக்களிடையே நற்பெயர் பெறும் வகையில் நல்லமுறையில் பணிசெய்ய வேண்டும் எனவும் அறிவுரை வழங்கினார். உதவி ஆய்வாளர்கள் மற்றும் ஆளிநர்களின் குடும்ப உறுப்பினர்களைப் பற்றியும் கேட்டறிந்தார் . உடன் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் வெ.விசுவேசுவரய்யா (தலைமையிடம்) அவர்கள், மாவட்ட குற்றப்பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் இரவிச்சந்திரன் (பொறுப்பு அரக்கோணம் உட்கோட்டம்) அவர்கள் மற்றும் காவேரிப்பாக்கம் வட்ட ஆய்வாளர் மணிமாறன் ஆகியோர் உடன் இருந்தனர்.


- சிறப்பு செய்தியாளர் சுரேஷ்குமார். 

No comments:

Post a Comment

Post Top Ad