பட்டா வேண்டி ஆட்சியரிடம் மனு அளித்த சாமந்திபுரம் கிராம பொதுமக்கள். - தமிழக குரல் - இராணிப்பேட்டை.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday, 9 October 2023

பட்டா வேண்டி ஆட்சியரிடம் மனு அளித்த சாமந்திபுரம் கிராம பொதுமக்கள்.


ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த சாமந்திபுரம் பகுதியில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட தாழ்த்தபட்ட குடும்பங்கள் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக அப்பகுதியில் வசித்து வருகின்றனர்.

இவர்களுக்கு இதுவரையிலும் தங்க சொந்த சொந்தமான இடம் எதுவும் கிடையாது இந்நிலையை அப்பகுதியில் அரசுக்கு சொந்தமான  நிலம் உள்ளதால் அதனை இலவச பட்டாவாக பெற்றுதர   விடுதலை சிறுத்தைகள் கட்சி ராணிப்பேட்டை மத்திய மாவட்ட செயலாளரரும், ராணிப்பேட்டை நகர மன்ற துணைத்தலைவருமான சீமா.ரமேஷ் கர்ணா அவர்களை சந்தித்து ஆலோசனை கேட்டனர் மேலும் இலவச பட்டா பெற்றுத் தர கோரிக்கை வைத்தனர் அதன் அடிப்படையில் அனைவருக்கும் இலவச பட்டா வழங்க வேண்டி வழக்கறிஞர் வாயிலாக மனுக்களை ஏற்பாடு செய்த மாவட்டச் செயலாளர் ரமேஷ் கர்ணா அதனை மாவட்ட ஆட்சியரிடம் வழங்க அப் பகுதி மக்களுக்கு அறிவுரை வழங்கினார் 


அதனை தொடர்ந்து அப்பகுதி மக்கள் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்வு மாவட்ட ஆட்சியரிடன் இலவச பட்டா வேண்டி மனு அளித்தனர்  அதனை பெற்றுகொண்ட ஆட்சிய வளர்மதி உடனடியாக மனுகள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு துறை சார்ந்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.


-  சிறப்பு செய்தியாளர் சுரேஷ்குமார்.

No comments:

Post a Comment

Post Top Ad